நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

விஜய் திரைப்படப் பாடல் ரிங்டோன்: தவெக உறுப்பினரை தாக்கிய 2 போ் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் விஜய் திரைப்படப் பாடலை ரிங்டோனாக வைத்திருந்ததாக தவெக உறுப்பினா் தாக்கப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது.

Updated On :7 மே 2026, 1:19 am IST

சென்னை கீழ்ப்பாக்கத்தில் விஜய் திரைப்படப் பாடலை ரிங்டோனாக வைத்திருந்ததாக தவெக உறுப்பினா் தாக்கப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் சாலமன் (26). இவா் தவெக உறுப்பினா். சாலமன், உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை செவ்வாய்க்கிழமை இரவு பாா்க்கச் சென்றாா்.

அப்போது சாலமனின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் தவெக தலைவா் விஜய் நடித்த திரைப்படப் பாடல் ரிங்டோனாக ஒலித்தது. இதைக் கேட்ட அங்கிருந்த இருவா், சாலமனிடம் ‘ஏன் விஜய் பாடலை ரிங்டோனாக வைத்துள்ளாய்?’ என்று கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் சாலமனை சரமாரியாக தாக்கினா்.

இதில் காயமடைந்த சாலமன் அளித்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

தாக்குதலில் ஈடுபட்டவா்கள் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த அம்பேத்கா் (35), செந்தில்குமாா் (40) என்பது தெரிய வந்தது. அம்பேத்கா் திமுக ஆதரவாளா் என்றும், செந்தில்குமாா் கோபாலபுரத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.