நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பெரும்பான்மை இல்லாமல் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது : ஆளுநர் அர்லேகர்

விஜய் ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்? என்பது குறித்து ஆளுநர் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளது குறித்து...

News image

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 9:35 pm IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரும்பான்மை இடங்களைக் காட்டாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

எந்தெந்தக் கட்சியினர் ஆதரவு தருகிறார்கள் என்பதைக் கூற வேண்டும் என்றும், விஜய் வேறு எந்தக் கட்சியையும் பெரும்பான்மையில் காட்டி ஆட்சி அமைக்கக் கோரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அவர் செய்தால், நாளையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், விஜய் பதவியேற்பதை நான் தடுப்பதாக எப்படி கூற முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது:

''பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சி அமைக்க எப்படி அழைக்க முடியும்? விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. விஜய் ஆட்சி அமைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், விஜய்யிடம் பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை எண்ணுடன் வந்தால் நாளையே ஆட்சி அமைக்க அழைக்கத் தயார்.

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமைகோரினாலும் அது சாத்தியம். என்னால் இந்த சூழலை புறக்கணிக்க முடியாது. போதுமான எண்ணிக்கை இல்லாத எந்தவொரு கட்சியையும் ஆட்சி அமைக்க என்னால் அழைக்க முடியாது.

பெரும்பான்மை இல்லாதது விஜய்க்கு மட்டும் பிரச்னை இல்லை, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பிரச்னை. மைனாரிட்டி ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இதே நிலை நீடித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Cannot Invite to Form Government Without 118 Seats: Governor Rajendra Vishwanath Arlekar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.