திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல்

News image

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களைப் பெறாததால், ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்த நிலையில், திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இருப்பினும், இத்தகைய செய்திகளுக்கு திமுக, அதிமுக தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, திமுகவும் அதிமுகவும் தனித்தோ ஒன்றிணைந்தோ ஆட்சியமைத்தால், தவெகவின் எம்எல்ஏ-க்கள் அனைவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என கட்சியினருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தவெகவினருக்கு யாரேனும் ரூ. 10 கோடி கொடுத்தாலும், கட்சித் தலைவர் விஜய்க்கு நேர்மையாக நடக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

Summary

All 107 TVK MLAs To Resign If DMK, AIADMK Try To Form Government: Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.