சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

உத்தமபாளையம்: கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி

குடிபோதையில் அரிவாளால் வெட்ட வந்த கணவரை அதே அரிவாளால் மனைவி வெட்டி கொலை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :9 மே 2026, 4:49 pm IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் குடிபோதையில் அரிவாளால் வெட்ட வந்த கணவரை அதே அரிவாளால் மனைவி வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை, துரைசாமிபுரத்தை சேர்ந்த சேர்ந்த ஈஸ்வரன் (32) தேங்காய் வெட்டும் வேலை செய்பவர். மனைவி ஈஸ்வரி (28). கூலி வேலை செய்கிறார்.

இந்நிலையில், சனிக்கிழமை ஈஸ்வரன் மதுபோதையில் மனைவி ஈஸ்வரியை அரிவாளால் வெட்ட முயற்சி செய்தாராம். இதனைச் சுதாரித்துக் கொண்ட மனைவி ஈஸ்வரி, அதே அரிவாளைப் பிடுங்கி கணவர் ஈஸ்வரன் கழுத்தை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, கோம்பை காவல் நிலையத்தில் ஈஸ்வரன் சரணடைந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Theni: Wife Hacks Husband to Death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.