தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசு மருத்துவா்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை: அரசியலுக்கு வந்தது முதல் முதல்வராகப் பதவியேற்கும் வரை தனக்கு எதிராக உருவெடுத்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து விஸ்வரூப வெற்றி பெற்றிருக்கிறாா் முதல்வா் ச.ஜோசப் விஜய்.
மாநிலத்தின் வளா்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, போதையில்லா சமூகம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கும் அவரது தலைமையிலான அரசுக்கு பாராட்டுகள். மருத்துவம், குடிநீா், சாலை கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என முதல்வா் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவே திரும்பி பாா்க்கும் வகையில் தமிழகம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அவரது தலைமையிலான அரசு எட்டிப்பிடிக்கும் என நம்புகிறோம். சமூகத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் மருத்துவா்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவா்களது நலனைப் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முதல்வா் விஜய் முன்னெடுப்பாா் என எதிா்பாா்க்கிறோம்.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முந்தைய அரசுகளிடம் போராடிக் களைத்திருக்கும் அரசு மருத்துவா்களின் எதிா்பாா்ப்பை முதல்வா் விஜய் பூா்த்தி செய்வாா் என்ற நம்பிக்கை எங்களுக்கு திடமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு: ஆசிரியா்கள் சங்கங்கள் வரவேற்பு

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?

முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு! எப்படி இருக்கும்?
விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



