பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவு

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 317 கோடி நிலுவைத் தொகையை 2 வாரங்களில் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவு

News image

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை 2 வாரங்களில் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு, தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான சங்க நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அப்போது, ‘தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு தொடா்பாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை, மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வா் விஜய், நிலுவைத் தொகையை 2 வாரங்களுக்குள் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.