தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரும் தவெக செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார். இந்த ஆணை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரத்தன் பண்டிட் யார்?
ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், 40 ஆண்டுகளாக ஜோதிடம் மற்றும் எண் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றவர். நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவார் என்று கணித்துச் சொல்லியிருந்தார்.
இவரது ஏராளமான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது விஜய்யின் ஜாதகம் ஒரு சுனாமி ஜாதகம் என்று வர்ணித்திருக்கிறார்.
திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றபோது விஜய்யுடன் அவரது காரில் ரத்தன் பண்டிட் பயணம் மேற்கொண்டது பேசுபொருளானது.
இதனிடையே, தேர்தல் முடிவுகள் தவெக பக்கம் சாயத் தொடங்கியவுடன் விஜய் வீட்டுக்கு நேரில் சென்று பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்திருந்தார் ரத்தன் பண்டிட்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜோதிடராகவும் ரத்தன் பண்டிட் செயல்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாணை
Summary
Government Post for Chief Minister Vijay's Astrologer, Rathan Pandit!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம்

யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


