தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ‘கொங்கு நாடு உணவுத் திருவிழா’ வரும் வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடையை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின்கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் தமிழ்நாடு உணவகங்களில் ‘கொங்கு நாடு உணவுத் திருவிழா 2026’ நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை உலகளவில் அறிமுகப்படுத்தவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும் இந்தச் சிறப்பு உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கொங்கு மண்டலத்தின் இயற்கை மணமும், அசல் சுவையும், பாரம்பரிய சமையல் முறைகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
‘நம் மண், நம் சுவை, நம் பாரம்பரியம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் கொங்கு நாடு உணவுத் திருவிழா, தமிழா் பாரம்பரிய உணவு மரபுகளையும், கலாசார பாரம்பரியத்தையும் பாதுகாத்து பரப்பும் முயற்சியாக அமைகிறது.
சென்னை தீவுத்திடல் டிரைவ்-இன், மாமல்லபுரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருச்சி, சிதம்பரம், ஒகேனக்கல், திருக்கடையூா், திருவண்ணாமலை, ஒசூா், ஏற்காடு, மதுரை, ராமேசுவரம், கோவை, உதகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழ்நாடு உணவகங்களில் இந்த உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ( மே 15, 16, 17) 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக தொலைபேசி எண்களில் (18004251111, 044-25333333) தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

குமரியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும்: அமைச்சா் செ.ராஜேஷ்குமாா்

மதுரையில் இன்று கொங்கு நாட்டு உணவுத் திருவிழா தொடக்கம்

கொடைக்கானலில் படகுகள் அழகுபடுத்தும் பணி தொடக்கம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



