தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா செய்துள்ளார்.
தமிழ்நாட்டு முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
அவர் பதவியேற்று இரண்டு நாள்களான நிலையில், தமிழக அரசு நிர்வாகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று (மே 12) மாலை வெளியிட்டது.
முன்னாள் தலைமைச் செயலரான முருகானந்தம் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், அமுதா, மணிவாசன், கிறிஸ்துராஜ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
2006-2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் திமுக ஆட்சியின்போது அரசு தலைமை வழக்குரைஞராக இவர் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞராக 2024 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.
இவரின் தந்தை வி.பி. ராமனும் அரசு தலைமை வழக்குரைஞராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ராஜிநாமா

அஸ்ஸாம் முதல்வா் ராஜிநாமா: புதிய அரசு மே 11-இல் பதவியேற்பு

உண்மை தெரிந்தாக வேண்டும்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

