ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு, முதல்முறையாக நேரலை செய்யப்படவுள்ளது.

News image

சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்

Updated On :13 மே 2026, 9:10 am IST

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை செய்யப்படவுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மேற்கொள்ளும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்படவுள்ளது.

தற்போது சட்டப்பேரவையில் 232 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், எனவே 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடும்.

திருச்சி கிழக்கில் விஜய் ராஜிநாமா செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மூன்று வாக்குகளைத் தவிர்த்து, தவெகவில் 105 வாக்குகள் உள்ளன.

இதனிடையே அதிமுகவில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் பிரிந்த குழுவினர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Assembly Confidence Vote Broadcast Live for the First Time

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.