நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கப் போவதாக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் பேசியதாவது:
”தவெக மீதான நம்பிக்கை தீர்மானத்தை பாஜகவுக்கு எதிரான பிரசாரம் போன்று மாண்பை மீறி சிலர் பேசிவிட்டனர். ஒற்றை தாமரை என்று ஒருவர் கூறினார். கடந்த காலத்தில் பாருங்கள் இரு எம்பிக்களுடன் இருந்த பாஜக, தற்போது மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது.
தமிழகத்தில் காலூன்றாது என்கிறார்கள். அதனை தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக, தவெக அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை வகிக்கப் போகிறது” என்றார்.
Summary
BJP to Remain Neutral in Confidence Vote! — MLA Bhojarajan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே

சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை நிகழ்வுகள் - முழுவிவரம்







