முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

சிறுபான்மை அரசுதான்; ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சி அரசாக இருக்கும்! முதல்வர் விஜய்

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியது பற்றி...

News image

முதல்வர் விஜய் - TN assembly

Updated On :1 மணி நேரம் முன்பு

தவெக அரசு சிறுபான்மை அரசுதான் என்றும் ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சியைத் தரும் அரசாக இருக்கும் என்றும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று(மே 13) காலை முன்மொழியப்பட்ட நிலையில், அதன் மீது பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர்.

தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தவெக 144 வாக்குகள் ஆதரவுடன் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறிய பின்னர் முதல்வர் விஜய் பேசுகையில்,

"நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், தனி அணியாக, மக்கள் அணியாக, மக்கள் விரும்பும் அணியாக களமிறமாகியது.

1967, 1977 தேர்தல்களைப் போலவே சாமானியர்களின் அரசையே அமைக்கும் என்று நாங்கள் தீர்மானமாகக் கூறினோம். அதன்படியே ஒரு விரல் புரட்சி விசில் புரட்சி ஆனது. இந்த அரசு சாமானியர்களின் அரசாக இருக்கும்.

தனிப்பெரும் கட்சியாக எங்களை மக்கள் சட்டப்பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தனிப்பெரும்பான்மை நூலிழையில் தவறிவிட்டது. பெரும்பான்மை இன்றி சிறுபான்மை என்று கூறினால் அதுவும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். எங்களுடைய அரசு சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசு.

பெண்கள் முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவருக்குமான அரசாக இருக்கும். கொள்கைத் தலைவர்கள் வழியில் மனசாட்சியுள்ள மக்களாட்சி அரசாக இருக்கும்.

சமூக நீதி, மதச்சார்பற்ற, சாதி - மதம் பாகுபாடு காட்டாத அரசாக இருக்கும். துணிச்சலுடன் செயல்படும் அரசாக இருக்கும்.

பதவிக்காக அதிகாரத்துக்காக அமைந்த அரசு அல்ல இது, மக்களுக்காக அமைக்கப்பட்ட அரசு" என்று பேசினார்.

Summary

CM joseph vijay speech in tn assembly after win in floor test

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.