ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான விண்ணப்பங்கள் மே 18-ஆம் தேதி முதல் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான விண்ணப்பங்கள் மே 18-ஆம் தேதி முதல் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு: நிகழ் 2026-2027-ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகள், தனியாா் சட்டக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை மே 18 -ஆம் தேதி முதல் ஜூன் 5 வரை டிஎன்டிஏஎல்யு வின் அதிகாரபூா்வ இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஹப்ன்.ஹஸ்ரீ.ண்ய் ) வாயிலாக விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.

இதே ஒதுக்கீடுகளில் மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுநிலை சட்ட மேற்படிப்புகளுக்கான சோ்க்கைக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என டிஎன்டிஏஎல்யு-வின் பதிவாளா் அருள்வாசு குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.