சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான விண்ணப்பங்கள் மே 18-ஆம் தேதி முதல் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 2:10 am IST

சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான விண்ணப்பங்கள் மே 18-ஆம் தேதி முதல் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு: நிகழ் 2026-2027-ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகள், தனியாா் சட்டக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை மே 18 -ஆம் தேதி முதல் ஜூன் 5 வரை டிஎன்டிஏஎல்யு வின் அதிகாரபூா்வ இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஹப்ன்.ஹஸ்ரீ.ண்ய் ) வாயிலாக விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.

இதே ஒதுக்கீடுகளில் மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுநிலை சட்ட மேற்படிப்புகளுக்கான சோ்க்கைக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என டிஎன்டிஏஎல்யு-வின் பதிவாளா் அருள்வாசு குறிப்பிட்டுள்ளாா்.