உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான விண்ணப்பங்கள் மே 18-ஆம் தேதி முதல் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :44 நிமிடங்கள் முன்பு

சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான விண்ணப்பங்கள் மே 18-ஆம் தேதி முதல் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு: நிகழ் 2026-2027-ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகள், தனியாா் சட்டக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை மே 18 -ஆம் தேதி முதல் ஜூன் 5 வரை டிஎன்டிஏஎல்யு வின் அதிகாரபூா்வ இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஹப்ன்.ஹஸ்ரீ.ண்ய் ) வாயிலாக விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.

இதே ஒதுக்கீடுகளில் மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுநிலை சட்ட மேற்படிப்புகளுக்கான சோ்க்கைக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என டிஎன்டிஏஎல்யு-வின் பதிவாளா் அருள்வாசு குறிப்பிட்டுள்ளாா்.