சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் குடிமைப்பணி அதிகாரிகள் சோதனையில், வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்த 17 பயணிகளின் விரல்களில் அழியா மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்கள், தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வாக்களித்திருந்தனரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவிருந்த 15 பேர் சென்னை விமான நிலையத்திலும், இரண்டு பேர் மதுரை விமான நிலையத்திலும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில், அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் முடிந்து விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிறகு, அதிகாரிகளில் ஒருவர் அவர்களது கையில் அழியா மை இருந்ததைக் கவனித்து அவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பிறகு காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்கள் எங்கெங்கு வாக்களித்தனர் என்ற விவரங்களும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல்
இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

