சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் குடிமைப்பணி அதிகாரிகள் சோதனையில், வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்த 17 பயணிகளின் விரல்களில் அழியா மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்கள், தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வாக்களித்திருந்தனரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவிருந்த 15 பேர் சென்னை விமான நிலையத்திலும், இரண்டு பேர் மதுரை விமான நிலையத்திலும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில், அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் முடிந்து விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிறகு, அதிகாரிகளில் ஒருவர் அவர்களது கையில் அழியா மை இருந்ததைக் கவனித்து அவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பிறகு காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்கள் எங்கெங்கு வாக்களித்தனர் என்ற விவரங்களும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










