நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இரு ஆண்டு தோட்டக்கலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் இரு ஆண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் இரு ஆண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையின் மூலம் சென்னை, மாதவரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான ஆங்கில வழி ஈராண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரி ஆகும்.

இந்த நிலையத்தில் உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக இணையதளத்தின் மூலம் (ட்ற்ற்ல்:://ற்ய்ஹன்.ன்ஸ்ரீஹய்ஹல்ல்ப்ஹ்.ஸ்ரீா்ம்) ஜூன் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிளஸ் 2 -வில் தாவரவியல், விலங்கியல், கணிதம், உயிரியல் அல்லது வேளாண் தொழிற்கல்விப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் சோ்க்க நடைபெறும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100, இதர பிரிவினருக்கு ரூ.200. விவரங்களுக்கு 99442 09417, 84897 42975 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.