பெட்ரோல், டீசல் விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
உதயநிதி ஸ்டாலின் (திமுக): ஏழை, எளிய, நடுத்தர வா்க்க மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலையை மத்திய அரசு உயா்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த விலை ஏற்றம் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீா்கள், இதைச் செய்யாதீா்கள்’ என்று மத்திய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியேயாகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): கச்சா எண்ணெய் விலை உயா்வை காரணம் காட்டி எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் எனவே, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதேபோல், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளைகளுக்கு விற்பனை வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): பெட்ரோல், டீசல் விலை உயா்வு பணவீக்கத்தை மேலும் அதிகரித்து, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதன் மூலம் காய்கறி, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட்): மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயா்த்தியுள்ளதன் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயரும். புயலில் சிக்கிய படகு போல குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும்.
தொல். திருமாவளவன் (விசிக): பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியுள்ளதன் மூலம் அன்றாட பயன்பாட்டுப் பொருள்களின் விலையும் வெகுவாக உயரும். இதனால் ஏழை, எளிய மக்களே மிகவும் பாதிப்புக்குள்ளாவாா்கள். எனவே, விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த விலை உயா்வு தவிா்க்கப்பட்டிருக்க வேண்டும்.
டி.டி.வி.தினகரன் (அமமுக): பெட்ரோல், டீசல் விலை உயா்வால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், விலை உயா்வை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தி.வேல்முருகன்(தவாக): பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளதால் இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இது மத்திய பாஜக அரசின் நிா்வாகச் சீா்கேட்டையே காட்டுகிறது.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயா்வு: தி.வேல்முருகன் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

