தி ஹேக் : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தில் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை(மே 15) நெதர்லாந்துக்குச் சென்றடைந்தார். இந்த நிலையில், நெதர்லாந்தில் அவர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியொன்றில், 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்தது நெதர்லாந்து அரசு.
இது குறித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், “செப்பேடுகளில் 21 பெரிய தகடுகள் அடங்கிய ஒரு தொகுப்பும் மூன்று சிறிய தகடுகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெருமளவில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், முதலாம் ராஜேந்திர சோழன் தமது தந்தையான முதலாம் ராஜராஜனுக்கு வாய்மொழியாக அளித்த வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

செப்பேடுகளில் தமிழ் எழுத்துகள் - பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவிலிருந்து
இவையனைத்தும் சோழர்களின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இந்தியாவில் நாம் சோழர்களைக் குறித்தும் அவர்தம் பண்பாடு குறித்தும் மிகுதியாக பெருமைகொள்கிறோம்.
கடந்த 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து நெதர்லாந்தின் ‘லெய்டென்’ பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட செப்புத் தகடுகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டமைக்காக அந்நாட்டு அரசுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

செப்பேடுகளைப் பார்வையிடும் பிரதமர் மோடி - பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவிலிருந்து
Summary
Netherlands hands back Chola dynasty copper plates to India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







