சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இங்கு உள்ள கட்டுமான பணிகள், ஹாஸ்டல் உணவு, விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் தேவைகள் குறித்து கேட்டு அறிந்தேன். விளையாட்டுத் துறை அமைச்சர் என்பதை விட இதே இடத்தில் ஒரு ஹாஸ்டல் மாணவராக இருந்த விளையாட்டு வீரர் நான்.
இது என் வீடு. தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் விளையாட்டு அவசியம். பிரேசிலில் போதை பழக்கம் அதிகமாக இருந்தபோது, அந்த அரசு விளையாட்டில் முக்கியத்துவம் கொடுத்ததால் அதில் முதலிடம் பெற்றது.
இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு விளையாட்டுத் துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளியிலிருந்தே கல்விக்கு நிகராக விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தி இருக்கிறார்.
அதே போல சர்வதேச அளவில் போட்டிகள் நடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டார். ஆய்வு செய்தபின் மாணவர்களுடன் அமைச்சர் உரையாடி மகிழ்ந்தார்.
Summary
Public Works and Sports Minister Adhav Arjuna inspected the Nehru Indoor Stadium in Periyamedu, Chennai today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










