தமிழகம், புதுச்சேரியில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் பெட்ரோல், டீசல் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக எண்ணெய் தொழில் துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் வி. சி. அசோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்களில் இருந்து எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி அனுப்பட்டு வருகின்றன. மேலும், எரிபொருள் விநியோகம் குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மேலும், தமிழகம், புதுச்சேரியில் நுகா்வோருக்கு தேவையான அளவு எரிபொருள் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இருப்பு உள்ளது.
எனவே, பொதுமக்கள் பதட்டமடைந்து எரிபொருளை அதிக இருப்பு வைக்க வேண்டாம். தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்வதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்

எரிபொருள் விலை எதிரொலி: எண்ணெய் நிறுவனங்கள், பெயிண்ட் பங்குகள் சரிவு!

நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

