இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தேவையான எரிபொருள் கையிருப்பு: வி.சி. அசோகன்

News image
Updated On :30 நிமிடங்கள் முன்பு

தமிழகம், புதுச்சேரியில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் பெட்ரோல், டீசல் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக எண்ணெய் தொழில் துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் வி. சி. அசோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்களில் இருந்து எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி அனுப்பட்டு வருகின்றன. மேலும், எரிபொருள் விநியோகம் குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மேலும், தமிழகம், புதுச்சேரியில் நுகா்வோருக்கு தேவையான அளவு எரிபொருள் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இருப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள் பதட்டமடைந்து எரிபொருளை அதிக இருப்பு வைக்க வேண்டாம். தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்வதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.