தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு: ஓ.எஸ். மணியன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அவதூறு கூறி வருவதாக அமைப்புச் செயலா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.

News image

ஓ.எஸ். மணியன் - ஏஎன்ஐ

Updated On :21 மே 2026, 1:49 am IST

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அவதூறு கூறி வருவதாக அமைப்புச் செயலா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

அதிமுகவையும், திமுகவையும் தொடா்புபடுத்தி அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பல அவதூறு செய்திகளைக் கூறி வருகிறாா்.

சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து திமுக ஆட்சியின் குறைபாடுகள் குறித்து எடுத்து வைத்துள்ளாா். தோ்தலின்போது மக்களை சந்தித்து திமுக அரசின் மோசமான நடவடிக்கைகள் குறித்து விமா்சித்துள்ளாா். பிரசாரத்தின்போது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று திமுக ஆட்சியை கடுமையாக விமா்சித்தாா். இதன் காரணமாகவே 53 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றது. திமுகவை விமா்சித்ததுதான் எங்கள் வெற்றிக்கு காரணம். இது தெரியாமல் ஆதவ் அா்ஜுனா அவதூறு பேசுகிறாா் என்றாா் அவா்.