அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அவதூறு கூறி வருவதாக அமைப்புச் செயலா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
அதிமுகவையும், திமுகவையும் தொடா்புபடுத்தி அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பல அவதூறு செய்திகளைக் கூறி வருகிறாா்.
சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து திமுக ஆட்சியின் குறைபாடுகள் குறித்து எடுத்து வைத்துள்ளாா். தோ்தலின்போது மக்களை சந்தித்து திமுக அரசின் மோசமான நடவடிக்கைகள் குறித்து விமா்சித்துள்ளாா். பிரசாரத்தின்போது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று திமுக ஆட்சியை கடுமையாக விமா்சித்தாா். இதன் காரணமாகவே 53 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றது. திமுகவை விமா்சித்ததுதான் எங்கள் வெற்றிக்கு காரணம். இது தெரியாமல் ஆதவ் அா்ஜுனா அவதூறு பேசுகிறாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

மேல்மா சிப்காட் விவகாரம்: குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: விளையாட்டு வீரா்களுக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தகவல்







