யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான தடுப்புக் காவல் சட்டத்தை (குண்டாஸ்) தமிழ்நாடு அரசு புதன்கிழமை ரத்து செய்துள்ளது.
வேறு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லையென்றால் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்புவதாகவும், முந்தைய வழக்குகள் அடிப்படையிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண், குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர், குண்டாஸ் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, பணம் பறித்தல் மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு உடல்நலப் பிரச்னை காரணமாக ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் காலம் நிறைவடைந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாத சவுக்கு சங்கரை ஆந்திரத்தில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை அழைத்து வரும் வழியில், சவுக்கு சங்கருக்கு ஆதரவான கும்பல் காவல்துறையினரை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 9 அன்று சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ் சட்டத்தில் வழக்குப் பதிய காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவு தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம், 1982ன் கீழ் ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டது.
ஆலோசனைக் குழு, தடுப்புக் காவலுக்கான காரணங்கள், காவல் துறையினரின் அறிக்கை, தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் கைதியின் வாய்மொழி விளக்கங்களை ஆய்வு செய்தது.
இதன் அடிப்படையில், சவுக்கு சங்கரை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்க போதுமான காரணம் இல்லை என்று ஆலோசனைக் குழு ஒருமனதாக கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, சவுக்கு சங்கர் மீதான தடுப்புக் காவல் சட்டப் பிரிவை ரத்து செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Summary
Goondas Act against YouTuber Savukku Shankar Quashed by TN Govt
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

சவுக்கு சங்கர் ஆந்திரத்தில் கைது!
விடியோக்கள்

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி

எடப்பாடி பழனிசாமியின் கண் அசைவில் ஆட்சி அமைந்திருக்கும்! - CV Shanmugam பரபரப்பு பேட்டி | ADMK | EPS



