யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து பற்றி...

News image

சவுக்கு சங்கர் - Photo: X | Savukku Shankar

Updated On :20 மே 2026, 4:13 pm IST

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான தடுப்புக் காவல் சட்டத்தை (குண்டாஸ்) தமிழ்நாடு அரசு புதன்கிழமை ரத்து செய்துள்ளது.

வேறு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லையென்றால் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்புவதாகவும், முந்தைய வழக்குகள் அடிப்படையிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண், குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர், குண்டாஸ் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, பணம் பறித்தல் மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு உடல்நலப் பிரச்னை காரணமாக ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் காலம் நிறைவடைந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாத சவுக்கு சங்கரை ஆந்திரத்தில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை அழைத்து வரும் வழியில், சவுக்கு சங்கருக்கு ஆதரவான கும்பல் காவல்துறையினரை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த ஏப்ரல் 9 அன்று சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ் சட்டத்தில் வழக்குப் பதிய காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவு தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம், 1982ன் கீழ் ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டது.

ஆலோசனைக் குழு, தடுப்புக் காவலுக்கான காரணங்கள், காவல் துறையினரின் அறிக்கை, தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் கைதியின் வாய்மொழி விளக்கங்களை ஆய்வு செய்தது.

இதன் அடிப்படையில், சவுக்கு சங்கரை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்க போதுமான காரணம் இல்லை என்று ஆலோசனைக் குழு ஒருமனதாக கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, சவுக்கு சங்கர் மீதான தடுப்புக் காவல் சட்டப் பிரிவை ரத்து செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Summary

Goondas Act against YouTuber Savukku Shankar Quashed by TN Govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.