யூடியூபா் சவுக்கு சங்கா் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வருகிறாா். எனவே, அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து போலீஸாா் தேடி வருவதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.
சவுக்கு சங்கா் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸாா் இரு மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கில் சவுக்கு சங்கா் கடந்த டிச.13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பின்னா் அவரது உடல்நல பிரச்னை காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக மாா்ச் 25-ஆம் தேதி அவருக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கா் இன்னும் சரண் அடையவில்லை. இந்தநிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கா் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வருகிறாா். எனவே, அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து சென்னை போலீஸாா் தேடி வருகின்றனா். சிபிஐ விசாரணை கோரியுள்ள இரு வழக்குகளையும் விசாரித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என கூறப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை வரும் ஏப்.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
Summary
Savukku Sankar arrested in Andhra Pradesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல்! ஆந்திரத்தில் 4 இடங்களையும் கைப்பற்றும் தேஜகூ!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு

பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை பிணை

சவுக்கு சங்கா் தலைமறைவு குற்றவாளி: உயா்நீதிமன்றத்தில் போலீஸாா் தகவல்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



