செவிலியா் மாணவி உயிரிழப்பு குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் தலைமையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினா் திருச்சிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-ஆம் ஆண்டு செவிலியா் மாணவி சீதாலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மூக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டப்போது உயிரிழந்தாா். அரசு தரப்பில் மாரடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக சக மாணவியா் குற்றச்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், மாணவி உயிரிழப்பு குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் பாஸ்கா் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்குழுவில், அதே மருத்துவமனையைச் சோ்ந்த காது, மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியா் பாரதி மோகன், மயக்கவியல் பேராசிரியா் சண்முகசுந்தரம், மருத்துவ பேராசிரியா் ஜெயபிரகாஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் குழுவினா் திருச்சி சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விசாரணை குழுவினா் அறிக்கையில், மாணவி உயிரிழப்பில் கவனக்குறைவு இருந்தது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் அருண்ராஜ் உறுதி அளித்துள்ளாா்.
தொடர்புடையது

திருச்சி செவிலியா் கல்லூரி மாணவி பலி: தி.வேல்முருகன் கண்டனம்!
பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை நிறைவு

சிவகங்கையில் செவிலியா் கல்லூரி தொடங்க தீவிர முயற்சி எடுப்பேன்: அ. குழந்தைராணி எம்எல்ஏ

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் பெண் உயிரிழப்பு: விசாரணைக் குழு அமைப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



