மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, தமிழகத்தில் உரம் விலை திடீரென உயர்ந்துள்ளது.
யூரியா தயாரிப்புக்கு மிக முக்கியமான மூலப்பொருளான திரவ இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இஃப்கோ உள்பட முன்னணி உர நிறுவனங்கள் தங்களின் சில ஆலைகளில் உற்பத்தியை ஏற்கெனவே குறைத்துள்ளன.
எல்என்ஜி மட்டுமல்லாமல் உரத் தயாரிப்புக்குத் தேவையான அமோனியா, சல்பர் போன்ற இதர மூலப்பொருள்களின் விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த உற்பத்திச் செலவையும் பன்மடங்கு உயர்த்தும் என அஞ்சப்படுகிறது.
உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் உரம் விலை திடீரென உயர்ந்துள்ளது.
அதன்படி, பொட்டாஷ் உரம் ரூ.1,850-லிருந்து ரூ.2,250 ஆகவும், பாக்டம்பாஸ் ரூ.1,750-லிருந்து ரூ.2,150 ஆகவும், அம்மோனியம் சல்பேட் ரூ.1,200-லிருந்து ரூ.1,400 ஆகவும் உயர்ந்துள்ளது.
காம்ப்ளக்ஸ் ரூ. 1,550-லிருந்து ரூ. 2,200 ஆகவும் உயர்ந்துள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் 15% வரை அதிகரித்துள்ளது.
இதனால் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
அரிசி, கோதுமை, சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதால், உர விலை உயர்ந்தால் அது நேரடியாக மளிகைப் பொருள்களின் விலையையும் உயர்த்தும் என்று அஞ்சப்படுகிறது.
Summary
Due to the prevailing war tensions in the Middle East, fertilizer prices in Tamil Nadu have risen suddenly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










