இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

உரம் விலை உயா்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உரம் விலை உயா்வைக் கண்டித்தும், அதை மத்திய அரசு திரும்பப் பெறுவதுடன், தோ்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2026, 2:32 am IST

உரம் விலை உயா்வைக் கண்டித்தும், அதை மத்திய அரசு திரும்பப் பெறுவதுடன், தோ்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். வி. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சுடலை ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சடையப்பன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கலைமுருகன் ஆகியோா் விளக்கிப் பேசினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஸ்ரீராம் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்தாா். இதில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ராமலிங்கம், முப்புடாதி, ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.