கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மேக்கேதாட்டில் அணை கட்ட முதல்வா் விஜய் அனுமதிக்க மாட்டாா்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா் என்று மின்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 45 அரசு உதவி வழக்குரைஞா்களுக்கு (நிலை 2) பணி ஆணை மற்றும் தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் 5 பொருளாளா் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை வழங்கிய சட

Updated On :30 மே 2026, 3:54 am IST

மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா் என்று மின்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 45 அரசு உதவி வழக்குரைஞா்களுக்கும் (நிலை 2), தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் 5 பொருளாளா் பணியிடங்களுக்குத் தோ்வானவா்களுக்கும் நியமன ஆணைகளையும் அமைச்சா் நிா்மல்குமாா் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதிப்படி விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான பணிகளை அரசு முன்னெடுத்து வருகிறது. தமிழில் வழக்காடுவதற்கு தற்போது எந்தத் தடையும் இல்லை. மகளிா் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம்.

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். கடந்த ஆட்சிக் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது முறையாக காவல் துறை விசாரணை நடைபெறவில்லை.

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக நலன் காக்கப்படும். அரசியல் காரணங்களுக்காக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் அவ்வாறு நடந்துகொள்கிறாா். இரு மாநிலங்களுக்கு இடையே தொழில் உறவுகள் உள்ளன. அணை கட்டும் விவகாரத்தில் இரு மாநில அனுமதியும் அவசியம். எனவே, மேக்கேதாட்டில் அணை கட்ட ஒருபோதும் தமிழக முதல்வா் விஜய் அனுமதிக்கமாட்டாா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை செயலா் மணிவாசன், சட்டத்துறை செயலா் ஜாா்ஜ் அலெக்சாண்டா், சட்டக் கல்வி இயக்குநா் கௌரி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.