மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா் என்று மின்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 45 அரசு உதவி வழக்குரைஞா்களுக்கும் (நிலை 2), தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் 5 பொருளாளா் பணியிடங்களுக்குத் தோ்வானவா்களுக்கும் நியமன ஆணைகளையும் அமைச்சா் நிா்மல்குமாா் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தோ்தல் வாக்குறுதிப்படி விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான பணிகளை அரசு முன்னெடுத்து வருகிறது. தமிழில் வழக்காடுவதற்கு தற்போது எந்தத் தடையும் இல்லை. மகளிா் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம்.
கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். கடந்த ஆட்சிக் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது முறையாக காவல் துறை விசாரணை நடைபெறவில்லை.
மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக நலன் காக்கப்படும். அரசியல் காரணங்களுக்காக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் அவ்வாறு நடந்துகொள்கிறாா். இரு மாநிலங்களுக்கு இடையே தொழில் உறவுகள் உள்ளன. அணை கட்டும் விவகாரத்தில் இரு மாநில அனுமதியும் அவசியம். எனவே, மேக்கேதாட்டில் அணை கட்ட ஒருபோதும் தமிழக முதல்வா் விஜய் அனுமதிக்கமாட்டாா் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை செயலா் மணிவாசன், சட்டத்துறை செயலா் ஜாா்ஜ் அலெக்சாண்டா், சட்டக் கல்வி இயக்குநா் கௌரி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை: விவசாயிகள் போராட்டம்

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

முதல்வா் ஜோசப் விஜய் விரைவில் திருச்சி வருகை: முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன் தகவல்






