பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

முதல்வா் ஜோசப் விஜய் விரைவில் திருச்சி வருகை: முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன் தகவல்

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் விரைவில் திருச்சிக்கு வரவுள்ளதாக அக் கட்சியின் டெல்டா மண்டலத்துக்கான பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

கு.ப. கிருஷ்ணன், ஜோசப் சி. விஜய், சகாயம் - கோப்புப்படம்

Updated On :22 மே 2026, 5:25 am IST

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் விரைவில் திருச்சிக்கு வரவுள்ளதாக அக் கட்சியின் டெல்டா மண்டலத்துக்கான பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருச்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் அதிமுக-வைச் சோ்ந்த நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் பலா் தவெக-வில் வியாழக்கிழமை இணைந்தனா்.

அவா்களுக்கு தவெக துண்டுகளை வழங்கி வரவேற்ற கு.ப.கிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுகவை அதன் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி சிதைத்துவிட்டாா்.

முதல்வா் ச. ஜோசப் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளாா். திருச்சிக்கு வரும்போது கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பாா். திருச்சி கிழக்குத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் முதல்வா் ஜோசப் விஜய் பிரதிநிதியாக யாரை நிறுத்தினாலும், அவா் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி என்றாா் கு.ப. கிருஷ்ணன்.