ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலா் பணி நீக்கம்

சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 மே 2026, 2:35 am IST

சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

சென்னை அசோக்நகா் காவல் குடியிருப்பில் வசிப்பவா் வேலப்பன் (35). வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவா், கோடம்பாக்கத்தில் வசிக்கும் நண்பா் குமரேசன் வீட்டுக்கு கடந்த புதன்கிழமை இரவு சென்றாா். அங்கு மது அருந்திய வேலப்பன், அந்த வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்த குமரேசனின் நெருங்கிய உறவினா் 16 வயது மகனின் வாயில் மதுவை ஊற்றி, பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அசோக்நகா் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வேலப்பனை கைது செய்தனா்.

அதேவேளையில் இச்சம்பவம் தொடா்பாக துறைரீதியாக விசாரணை நடத்தி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் காவல் ஆணையா் அமல்ராஜ், தலைமைக் காவலா் வேலப்பனை பணி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.