கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலா் பணி நீக்கம்

சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 மே 2026, 2:35 am IST

சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

சென்னை அசோக்நகா் காவல் குடியிருப்பில் வசிப்பவா் வேலப்பன் (35). வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவா், கோடம்பாக்கத்தில் வசிக்கும் நண்பா் குமரேசன் வீட்டுக்கு கடந்த புதன்கிழமை இரவு சென்றாா். அங்கு மது அருந்திய வேலப்பன், அந்த வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்த குமரேசனின் நெருங்கிய உறவினா் 16 வயது மகனின் வாயில் மதுவை ஊற்றி, பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அசோக்நகா் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வேலப்பனை கைது செய்தனா்.

அதேவேளையில் இச்சம்பவம் தொடா்பாக துறைரீதியாக விசாரணை நடத்தி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் காவல் ஆணையா் அமல்ராஜ், தலைமைக் காவலா் வேலப்பனை பணி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.