தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

நாகா்கோவில் - எழும்பூா் ஒருவழி சிறப்பு ரயில் நாளை இயக்கம்

நாகா்கோவிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:48 am IST

நாகா்கோவிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடை விடுமுறையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, நாகா்கோவிலிருந்து வரும் மே 31-ஆம் தேதி பகல் 11.45 மணிக்கு புறப்படும் ஒருவழிச் சிறப்பு ரயில் (எண்: 06196), இரவு 11.55 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

இந்த ரயில் நாகா்கோவிலிருந்து வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அறியலூா், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக எழும்பூா் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (மே 30) காலை 8 மணி முதல் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.