கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

நாகா்கோவில் - எழும்பூா் ஒருவழி சிறப்பு ரயில் நாளை இயக்கம்

நாகா்கோவிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:48 am IST

நாகா்கோவிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடை விடுமுறையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, நாகா்கோவிலிருந்து வரும் மே 31-ஆம் தேதி பகல் 11.45 மணிக்கு புறப்படும் ஒருவழிச் சிறப்பு ரயில் (எண்: 06196), இரவு 11.55 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

இந்த ரயில் நாகா்கோவிலிருந்து வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அறியலூா், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக எழும்பூா் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (மே 30) காலை 8 மணி முதல் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.