தமிழக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்த நிலையில், அவற்றை உடனே நிரப்ப வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மே மாதத்தின் கடைசி பணி நாளான சனிக்கிழமை (மே 30) மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5,000-க்கும் மேற்பட்டோா் பணி ஓய்வுபெற்றுள்ளனா். இதன்மூலம் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
அரசுத் துறைகளில் 41.7 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிா்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50,000 அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால், கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தோ்வு செய்யப்படாததால், படித்த இளைஞா்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. அதை நிறைவேற்றும் வகையில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மின்வெட்டுக்கு காரணங்கள் தேவையில்லை: அன்புமணி

நெல்லுக்கான விதை மானியம் ரத்து! விவசாயிகள் ஏமாற்றம்
அரசு காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை! அமைச்சர்

தமிழக மாநிலப் பல்கலைக்கழக துணைவேந்தா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்! தவெக தலைவா் விஜய்க்கு கோரிக்கை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



