சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாகத் தமிழ்... பேரவையில் தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் விஜய்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் சி. ஜோசப் விஜய் கொண்டுவரவுள்ள தனித் தீர்மானம் குறித்து...

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாகத் தமிழ்... பேரவையில் தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் விஜய் - DIPR
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசின் இந்தத் தீர்மானத்தில், தமிழின் செம்மொழி அந்தஸ்து மற்றும் சட்டத் துறையில் கலைச்சொற்களில் தமிழ் மொழி அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் ஆகியவை குறிப்பிடப்படவுள்ளன; அத்துடன், மின்னணு நீதிமன்றங்கள், தொழில்நுட்பம் சார்ந்த மொழிபெயர்ப்பு வசதிகள், சட்டத் தரவுத்தளங்கள் மற்றும் செய்யறிவு(ஏஐ) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அவை சூழ்நிலையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பது குறித்தும், இதன் காரணமாக இந்த சிக்கலை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகத் தமிழ் இருப்பதையும், சாட்சியங்களைப் பதிவு செய்வதிலும் மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கும் அனைத்துத் தீர்ப்புகள், ஆணைகள் மற்றும் நீதித்துறை சார்ந்த உத்தரவுகளைத் தமிழில் கிடைக்கச் செய்வதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தமிழைப் பயன்படுத்துவதற்கு 1956-ஆம் ஆண்டு மாநிலச் சட்டம் அனுமதிப்பதையும் இந்த தீர்மானம் சுட்டிக்காட்டக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளில் ஆங்கிலத்துடன் மாநிலத்தின் அலுவல் மொழியையும் பயன்படுத்த அனுமதிக்கும் தற்போதைய சட்டக் கட்டமைப்பு குறித்தும் இதில் குறிப்பிடப்பட வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்துவதை ஆதரித்து 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு மற்றும் உச்ச நீதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற முதன்மை அமர்வு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று பிப்ரவரி 2018-இல் மாநிலங்களவையில் அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் அளித்த பதில் குறித்தும் இந்த தீர்மானத்தில் குறிப்பிட வாய்ப்புள்ளது.
கேள்வி நேரம் முடிவடைந்த பின், முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும், அதன்பின் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மான நிறைவேற்றப்படும் என்றும், இந்த தீர்மானம் குறித்துச் சட்டப்பேரவையில் விவாதம் நடைபெறவும் வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Tamil Nadu Chief Minister C Joseph Vijay will move a resolution in the state Assembly on Thursday to urge the Centre to recognise Tamil as the principal language of Madras High Court, official sources said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




