உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

7 நாள்களில் 238 புகாா்களுக்கு ‘சிங்கப் பெண்’ படை நடவடிக்கை

தமிழக காவல் துறையின் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினா், தமிழகத்தில் கடந்த ஆக.28 முதல் செப்.3 வரையிலான 7 நாள்களில் 238 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா்.

கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 3:14 am IST

தமிழக காவல் துறையின் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினா், தமிழகத்தில் கடந்த ஆக.28 முதல் செப்.3 வரையிலான 7 நாள்களில் 238 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப் படையினா் அளித்த புகாா்கள், தகவல்களின் அடிப்படையில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதேபோல, காணாமல்போன பெண்கள், குழந்தைகள் என 5 போ் மீட்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 4 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பள்ளியை விட்டு நின்ற 61 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,448 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.