விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பட்டினம்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது! தீர்ப்பாயம்

பட்டினம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Immersion of Vinayagar idols cannot be permitted in the Pattinapakkam, Neelankarai areas: NGT

சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பக்தர்கள். - கோப்புப் படம்

Published On :

பட்டினம்பாக்கம், நீலாங்கரை, கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், விநாயகர் சிலைகளை மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் 2023-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகியன சிலைகள் கரைப்பதற்கான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியது.

அதற்கு மனுதாரர் தரப்பு, பட்டினம்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளாக உள்ளதால் அங்கு சிலைகளை கரைக்க அனுமதிக்க கூடாது என்று கோரியது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கு செல்லும் சிலைகளை மற்ற பகுதிகளுக்கு ஏன் மாற்றிவிடக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பிய நிலையில்,

வேறு பகுதிக்கு மாற்றுவதில் சட்டம் - ஒழுங்கு, கூட்ட நெரிசல், மதரீதியாக பதற்றமான பகுதிகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று தமிழக அரசு கூறியது.

பட்டினம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதிகளுக்கு வரும் விநாயகர் சிலைகளை வேறு இடங்களுக்கு மாற்றிவிடுவது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

Immersion of Vinayagar idols cannot be permitted in the Pattinapakkam, Neelankarai areas: NGT

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.