
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப். 13 நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது குறித்து...

மேட்டூர் அணை. - படம் - தினமணி
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (செப். 13) வினாடிக்கு 5,227 கன அடியாக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,495 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 5,227கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு12,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.83 அடியிலிருந்து 88.52 அடியாக சரிந்தது. இதனால், அணையின் நீர் இருப்பு 50.97 டிஎம்சியாக உள்ளது.
Summary
Due to light rainfall in the Cauvery catchment areas, the inflow of water into the Mettur Dam has increased to 5,227 cubic feet per second today (Sept. 13).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







