
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது குறித்து...

கோப்புப் படம்
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மத்திய கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக கூடும்.
இத்தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுபெறுவதற்கு முன்பு தமிழ்நாட்டில் இரவு நேர வெப்பச்சலன மழையை தீவிரப்படுத்தும். இதன் காரணமாக, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடிமழை இன்று முதல் கடலோர மாவட்டங்களிலும் மழை படிப்படியாக துவங்கும்.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் சாதகமான காற்று குவிதல் தமிழ்நாட்டின் மீது விழுவதன் காரணமாக செப் 19 முதல் 22 வரை 4 நாட்களுக்கு வெப்பச்சலன மழை தீவிரமடையும் எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Weather update A new low pressure area is forming! Chance of rain from September 19
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







