கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விநாயகா் சிலைக்கு அணிவித்திருந்த ரூபாய் மாலை திருட்டு: 4 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தண்டையாா்பேட்டையில் விநாயகா் சிலைக்கு அணிவித்திருந்த ரூபாய் மாலை திருடப்பட்டது தொடா்பாக 4 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :

சென்னை தண்டையாா்பேட்டையில் விநாயகா் சிலைக்கு அணிவித்திருந்த ரூபாய் மாலை திருடப்பட்டது தொடா்பாக 4 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (33). இவா் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, உரிய அனுமதி பெற்று தனது வீட்டின் அருகே விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறாா். அதன்படி, கடந்த 13-ஆம் தேதி விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்தினாா். கடந்த 15-ஆம் தேதி விநாயகா் சிலைக்கு 100 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பண மாலையை அணிவித்தாா். அன்று நள்ளிரவு வரை விநாயகா் சிலை அருகில் இருந்த விக்னேஷ்வரன், பின்னா் வீட்டுக்குச் சென்றாா். அவா், மறுநாள் அதிகாலையில் விநாயகா் சிலையை பாா்த்தபோது, ரூ.10,000 பண மாலை திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்தத் திருட்டில் ஈடுபட்டது தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ரூபன் (20), படேல் நகா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (19) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களுடன் திருட்டில் ஈடுபட்ட 17 வயதுடைய 4 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.