
திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு!
திருச்சியில் விவசாயிகள் நடத்திவந்த போராட்டம் 20 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி.....

திருச்சி போராட்டம்.
திருச்சியில் விவசாயிகள் நடத்திவந்த போராட்டம் 20 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5-வது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
விவசாயிகளின் போராட்டக் களத்திற்கு சனிக்கிழமை நேரில் வருகை தந்த வேளாண்மைத் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இக்கோரிக்கையை பரிசீலிக்க 20 நாட்கள் அவகாசம் வழங்குமாறு விவசாயிகளிடம் அவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அதையேற்று விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை 20 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளன.
Summary
The protest conducted by farmers in Trichy has been postponed for 20 days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







