யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

யுபிஐ கட்டணமாக 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் என்று நீதி ஆயோக் துணைத் தலைவர் கூறியிருப்பது பற்றி..

Ashok Kumar Lahiri

அசோக் குமார் லஹிரி - x.com

Published On :

ரூ.100 பரிவர்த்தனைக்கு யுபிஐ கட்டணமாக 40 காசு செலுத்துவதால் ஒன்றும் செத்துவிட மாட்டீர்கள் என்று நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் வணிகர்களுக்கு ரூ.2000க்கும் மேல் மேற்கொள்ளும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது என்ற முடிவுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைக்கான எம்டிஆர் எனப்படும் கட்டணம் வசூலிப்பதை நியாயப்படுத்திப் பேசியிருக்கும் அசோக் குமார் லஹிரி, யுபிஐ மூலம் ஒரு 100 ரூபாயை பரிவர்த்தனை செய்யும்போது 40 பைசா கட்டணம் செலுத்துவது என்பது மிகக் குறைந்த அளவுதான்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு நெடுங்காலம் இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒரு 40 பைசா செலுத்துவதால் ஒன்றும் செத்துவிட மாட்டீர்கள் என்று என்றும் கூறியிருக்கிறார்.

குறிப்பாக ரூ.2000க்கு மேல் செலுத்தினால் கட்டணம் என்பதுதான் மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது. காரணம் சாதாரண குடும்பங்கள் செலுத்தும் காசுக்கு கட்டணம் வசூலிக்கும்போது அதிகப்படியான தொகைக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.75 ஆயிரத்துக்கு மேல் எந்தத் தொகை செலுத்தினாலும் அதிகபட்சமாக ரூ.300 தான் செலுத்த வேண்டும்.

ஆனால், இதையே அதிகத் தொகை செலுத்துவோருக்கு மட்டும் கட்டணம் என்று வைத்தால் சாதாரண ஏழை மக்களும் வணிகர்களும் பாதிக்கப்பட மாட்டார்களே, ஏன் எப்போதும் சிறிய கட்டணமாக இருந்தாலும் ஏழைகள் பாதிக்கப்படுவது போல நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சிறு, குறு வணிகர்களின் கேள்வியாக உள்ளது.

நீதி ஆயோக் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் லஹிரி மேற்கு வங்க பாஜக எல்எல்ஏவும், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், 15-வது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER