கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகம் வழியாக சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள்!

திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகம் வழியாக சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள்...

சிறப்பு ரயில்கள்

Published On :

தீபாவளியை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகப் பகுதிகள் வழியாக மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வரும் அக். 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைதோறும்) திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06081) வரும் அக். 4, 11, 18, 25, நவ. 2 ஆகிய தேதிகளில் சந்திரகாச்சி நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் அக். 5, 12, 19, 26, நவ. 2 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைதோறும்)சந்திரகாச்சியில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06082) அக். 7, 14, 21, 28, நவ. 4 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தைச் சென்றடையும்.

தமிழகப் பகுதிகள் வழியாக இயக்கம்: இந்த ரயில்கள் திருச்சூா், பாலக்காடு, போதனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா உள்ளிட்ட 33 நிலையங்களில் நின்று செல்லும்.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப். 20) காலை முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Special trains from Thiruvananthapuram to Chandrakachi via Tamil Nadu!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.