இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக! - பெ.சண்முகம் வலியுறுத்தல்

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தல் தொடர்பாக...

Continuing suicides due to NEET exam-related stress

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் - கோப்புப்படம்

Published On :

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் பி.எஸ்சி(செவிலியர்) படிப்புக்கான 7 செவிலியர் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த செப்.16 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செவிலியர் கல்லூரிகளில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மையங்களில் உள்ள செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி உள்ளார்.

அந்த வழிகாட்டுதல் நெறிமுறையில் செவிலியர் கல்லூரிகளில் உருவாக்கப்படும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என்பதையும், அரசாங்கத்திற்கு ஓய்வூதியம் அல்லது வேறு எந்தத் தொடர் பொறுப்புகளும் இதனால் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னரே செவிலியர் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். அதேபோன்று படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் செப்.11 ஆம் தேதி ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பெண்களை அத்த கூலிக்கு தான் அமர்த்துவேன் என்று சொல்வதாகும். அதேபோன்று, இந்தியாவில் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கக்கூடிய தமிழக மருத்துவ கட்டமைப்பை சீர்குலைப்பதாகும். இது சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.

எனவே மேற்கண்ட இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப்பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டுமென அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Summary

Withdraw the government orders that undermine Tamil Nadu's medical infrastructure! – P. Shanmugam urges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER