இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

மேட்டூர் அணையில் பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் குல்சன் ராஜ் ஆய்வு!

மேட்டூர் அணையில் அணை பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் குல்சன் ராஜ் ஆய்வு மேற்கொண்டது குறித்து...

During the study

ஆய்வின் போது... - படம் - தினமணி

Published On :

மேட்டூர் அணையில் அணை பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் குல்சன் ராஜ் ஞாயிர்றுக்கிழமை (செப். 20) ஆய்வு மேற்கொண்டார்.

அணை பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினரும் நீரியல் மற்றும் இயந்திரவியல் நிபுணருமான குல்சன் ராஜ் இன்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.

அணையின் வலது கரையில் மேல்மட்டம், கீழ்மட்டத்தில் மற்றும் இடது கரையில் உள்ள 16 கண் மதகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மதகுகள் நல்ல நிலையில் இயங்குகிறதா? பராமரிப்பு சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, மோட்டார் படகில் சென்று நீர் தேக்க பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மேட்டூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வின் போது...

ஆய்வின் போது... - படம் - தினமணி

Summary

Gulshan Raj, a member of the Dam Safety and Evaluation Committee, conducted an inspection at the Mettur Dam on Sunday (Sept. 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.