கும்பகோணம் அருகே விலையில்லா பொருள்கள் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
நீரத்தநல்லூர் ஊராட்சியில் நீரத்தநல்லூர், காவற்கூடம் ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் மேலாத்துகுறிச்சி கிராமத்தில் உள்ள 361 பேருக்கு மட்டும் பலமுறை கேட்டும் அவை வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில் நீரத்தநல்லூர் ஊராட்சியில் புதன்கிழமை காலை நடைபெற்ற
மனுநீதி நாள் முகாமுக்கு வந்திருந்த மேலாத்துகுறிச்சி கிராமமக்கள் இதுகுறித்து முணுமுணுத்துக் கொண்டிருந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் முகாம் உடனடியாக முடிந்துவிட்டதால் தங்களுடைய கிராமத்தை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டதாகக் கூறி நீரத்தநல்லூர் கடைவீதியில் மேலாத்துக்குறிச்சி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கும்பகோணம் கோட்டாட்சியர் சங்கரநாராயணன்,வட்டாட்சியர்
ஸ்ரீ மாதவன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது,
அதிகாரிகளையும் கிராம மக்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
அதற்கு அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அடுத்தகட்டமாக விலையில்லாப் பொருட்கள் வழங்கும்போது மேலாத்துகுறிச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படும் என்றனர்.
இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் கும்பகோணம் - சென்னை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வல்லுறவு விவகாரம்: காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


