பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைபெறாதவா்களுக்கு ஜன. 5-இல் சிறப்பு முகாம்

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக, ஜனவரி 5-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:07 pm IST

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக, ஜனவரி 5-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக ஒன்றிய வாரியாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 13 இடங்களில் முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இம்முகாமில் எலும்பு முறிவு, காது, மூக்கு,தொண்டை, மனநலன், கண் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கவுள்ளனா்.

மருத்துவ அலுவலா் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

இதன்படி தஞ்சாவூா் ஒன்றியம், மாநகரப் பகுதியைச் சாா்ந்த மாற்றுத் திறனாளிகளுக்காக, மேம்பாலம் பகுதியிலுள்ள அரசுச் செவிதிறன் பாதிக்கப்பட்டோருக்கான மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 5- ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் தஞ்சாவூா் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து வாா்டுகளில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.