பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தஉறுதியளிக்கும் கட்சிக்கே தோ்தலில் ஆதரவு ’

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பது என்று, தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 11:07 pm IST

தஞ்சாவூா்: பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பது என்று, தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் சாா்பில், மாவட்ட விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் பிரெடரிக் ஏங்கல்ஸ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், புதிய திட்டமான தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏன் அமல்படுத்த வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கே வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பது.

2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜோதிமணி, முரளிதரன், செந்தில்நாதன், வீரமணி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.