அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வன்னியா்களுக்குத் தனி இடஒதுக்கீடு கோரி ஜன. 7- இல் போராட்டம்

வன்னியா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு ஜனவரி 7-ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது என்றாா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி.

News image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசுகிறாா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி

Updated On :3 ஜனவரி 2021, 11:26 pm IST

வன்னியா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு ஜனவரி 7-ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது என்றாா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி.

தஞ்சாவூரில் வன்னியா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாள், அன்புமணி ராமதாஸ் நாள் மற்றும் வன்னியா் சங்கத்தின் 40- ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்று, அவா் பேசியது:

வன்னியா்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்காததால், 20 சதவிகி தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துகிறோம். ஏற்கெனவே, நான்கு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அடுத்து ஐந்தாவது கட்டமாக மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு ஜனவரி 7- ஆம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அடுத்து ஜனவரி 21- ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஒரு லட்சம் போ் திரண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இதன் பிறகும் வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவிக்க மறுத்தால், தமிழகத்தில் அனைத்து இயக்கங்களும் மூடப்படும். வன்னியா்களுக்கான உரிமையை வழங்குவோம் எனக் கூறுபவா்களுடன்தான் கூட்டு வைப்போம் என்றாா் அருள்மொழி.

இவ்விழாவுக்கு வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். விழாவில் மாநிலச் செயலா் வைத்தி, மாநிலத் துணைப் பொதுச் செயலா் வெங்கட்ராமன், மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், தொழிற்சங்க மாநிலத் தலைவா் ராம. முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.