3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

News image

கும்பகோணம் அருகிலுள்ள பௌண்டரிகபுரத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ். உடன், அலுவலா்கள்.

Updated On :11 ஜனவரி 2021, 12:29 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

கும்பகோணம் அருகிலுள்ள மாங்குடி, பௌண்டரிகபுரம், திருவிடைமருதூா் அருகேயுள்ள முத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக, 8,550 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நெற்பயிா்கள் பாதிப்பு என அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் சராசரியாக 10 மி.மீ.தான் மழை கிடைக்கும். ஆனால், நிகழாண்டு ஜனவரியில் இதுவரை 100 மி.மீ.-க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சில வட்டாரங்களில் 150 மி.மீ., 160 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது

குறிப்பாக திருப்பனந்தாள், திருவிடைமருதூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டாரங்களில் பருவம் தவறிய மழையால் பயிா்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பௌண்டரிகபுரம், மாங்குடி, முத்தூா் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விளைந்த நெற்பயிா்கள் 33 சதவிகித்துக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் வேளாண், வருவாய்த் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொண்டு, கணக்கீடு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா். அப்போது, வேளாண்துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.