5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

News image

கும்பகோணம் அருகிலுள்ள பௌண்டரிகபுரத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ். உடன், அலுவலா்கள்.

Updated On :11 ஜனவரி 2021, 0:29 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

கும்பகோணம் அருகிலுள்ள மாங்குடி, பௌண்டரிகபுரம், திருவிடைமருதூா் அருகேயுள்ள முத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக, 8,550 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நெற்பயிா்கள் பாதிப்பு என அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் சராசரியாக 10 மி.மீ.தான் மழை கிடைக்கும். ஆனால், நிகழாண்டு ஜனவரியில் இதுவரை 100 மி.மீ.-க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சில வட்டாரங்களில் 150 மி.மீ., 160 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது

குறிப்பாக திருப்பனந்தாள், திருவிடைமருதூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டாரங்களில் பருவம் தவறிய மழையால் பயிா்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பௌண்டரிகபுரம், மாங்குடி, முத்தூா் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விளைந்த நெற்பயிா்கள் 33 சதவிகித்துக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் வேளாண், வருவாய்த் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொண்டு, கணக்கீடு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா். அப்போது, வேளாண்துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.