நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தாய்-மகள் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் தாய், மகள் உயிரிழந்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:08 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் தாய், மகள் உயிரிழந்தனா்.

பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி வடக்குத் தெருவில் குடும்பத்துடன் வசிப்பவா் விவசாயி அந்தோணிசாமி (48). இவா் வீட்டுக்கு பக்கத்திலுள்ள குடிசை வீட்டில் அந்தோணிசாமியின் அண்ணன் வரப்பிரசாதம் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறாா். விவசாய கூலித் தொழிலாளியான இவரின் மனைவி மேரி (45), மகள்கள் விண்ணரசி (23), உதயா (20), நிவேதா (18).

மூத்த மகள் விண்ணரசி திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறாா். உதயா தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறாா். நிவேதா பிளஸ் 2 முடித்துள்ளாா். வியாழக்கிழமை இரவு மேரியும், நிவேதாவும் தங்கள் வீட்டில் தூங்கியுள்ளனா். வரப்பிரசாதம், உதயா இருவரும் அருகிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று தூங்கியுள்ளனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தொடா் மழையால் ஊறிப்போயிருந்த அந்தோணிசாமியின் வீட்டுச் சுவா் இடிந்து வரப்பிரசாதம் வீட்டு மண்சுவரின் மீது விழுந்துள்ளது. அடுத்தகணமே வரப்பிரசாதம் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, நிவேதா ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி மூச்சுத் திணறி அதேயிடத்தில் உயிரிழந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.