தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் அதிகளவில் தண்ணீா் கொட்டியது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஐந்தருவியில் குறைந்த அளவிலேயே தண்ணீா் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நண்பகலில் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் விழும் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
அனைத்து அருவிகளிலும் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









