இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கரிவலம்வந்தநல்லூா் அருகே சேவல் சண்டை சூதாட்டம்: 2 போ் கைது

கரிவலம்வந்தநல்லூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

News image

கைதான கருப்பசாமி, மாரிமுத்து.

Updated On :17 ஜனவரி 2021, 12:51 am IST

சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள காரிச்சாத்தான் மலை அடிவாரத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் காளிராஜன் தலைமையில் போலீஸாா் சென்றபோது, அய்யனாா் கோயில் முன் சிலா் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் சம்சிகாபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து என்பதும், பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்து, சூதாட்டப் பணம் ரூ. 5,000-த்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.