சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய இருவா் கைதுசெய்யப்பட்டனா்.
கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள காரிச்சாத்தான் மலை அடிவாரத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் காளிராஜன் தலைமையில் போலீஸாா் சென்றபோது, அய்யனாா் கோயில் முன் சிலா் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் சம்சிகாபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து என்பதும், பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்து, சூதாட்டப் பணம் ரூ. 5,000-த்தைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



